districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி அளிப்பு மற்றும் நகர மக்கள் கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி அளிப்பு மற்றும் நகர மக்கள் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் உளுந்தூர்பேட்டையில் புதனன்று நடைபெற்றது, நகரக் குழு செயலாளர் பி.சேகர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலக் குழு இ.முத்துக்குமாரிடம் உளுந்தூர்பேட்டை நகர கமிட்டியின் சார்பில் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் நிதியாக வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் டி. எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  ஜி.ஆனந்தன், எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.தேவி, பி.சின்னராசு, கே.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.