districts

img

தளி ஊராட்சியில் யானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிதியுதவி

கிருஷ்ணகிரி, மே5 - தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியம் வனப்பகுதியான மேடு முத்துக்கோட்டையில் வசிக்கும் அப்பைய்யா(52) அதிகாலையில் விவ சாயம் செய்துகொண்டிருந்தபோது யானை தாக்கி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.50ஆயிரத்திற்கான  காசோலையை அப்பையாவின் குடும்பத்தி னரிடம் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ வழங்கினார். தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிக்கோட்டை ஊராட்சி தலைவர் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பாளர் மணிவண்ணன், வனச்சரகர்கள்,அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.