திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருமுல்லைவாயில் அண்ணனூர் ரயில் நிலையம் அருகே இறுதி கட்ட பிரச்சாரம் புதனன்று (ஏப். 17) நடைபெற்றது. இதில் திமுக மாநகர பொறுப்பாளர் சண்.பிரகாஷ், மேயர் உதயகுமார், நகரச் செயலாளர்கள் ராஜேந்திரன், பேபி சேகர், சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், பகுதிச் செயலாளர் ஏ.ஜான், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் திருச்செல்வம், சிபிஐ பகுதிச் செயலாளர் மயில்வாகனம் உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் கலந்து கொண்டனர்.