districts

img

குண்டும் குழியுமாக மாறிய அத்திப்பட்டு சாலை

அம்பத்தூர், ஜன. 4- அம்பத்தூர் அத்திப்பட்டில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை முற்றிலுமாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக் கம், எம்.ஜி.ஆர்.புரம், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஐயப்பா நகர், செல்லியம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், அத்திப்பட்டு அரசு பள்ளிக்கு எதிரே உள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.  ஆனால் இந்த சாலை பல மாதங்க ளாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியு மாக மாறியுள்ளன. இரவு நேரங்களில் சரியான மின்விளக்கு வசதி இல்லாததால் வயதானவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான தொழிலா ளர்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் இரவு பகல்  பாராது அதிகளவில் செல்வதால், சாலை தொடர்ந்து பழுதடைந்து வருகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவி கள், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடி யாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.