districts

img

ஒயிட்லாங் ரக கத்திரி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி, ஆக.3-

      கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் 2 மாதங்களில் அதிக வரு வாய் தரக்கூடிய ஒயிட்லாங் ரக கத்திரிக்காய்களை சாகுபடி செய்ய விவ சாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷண நிலை மற்றும் நல்ல மண் வளம் ஆகியவற்றால் பெரும்பாலான விவசாயி கள் பீன்ஸ், கேரட், தக்காளி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வரு கின்றனர்.  

    இந்த நிலையில் ஓசூர் அருகே பாரந்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர், ஒயிட்லாங் கத்திரிக்காயை அதிகளவு சாகுபடி செய்துள்ளார்.

    வெளிச்சந்தைகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து கத்திரிக்காய்களை, கேரளா, கர்நாடகாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வரு வதாகவும் மகிழ்ச்சி யுடன் தெரி வித்துள்ளார். வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரி தாகிவிட்ட சூழ்நிலையில் அழிந்துவரும் விவ சாயத்தை பாதுகாக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒயிட்லாங் கத்திரிக் காயை இயற்கை முறையில் விளைவித்ததாக கூறும் விவசாயிகள், அதற்காக 50 லோடு மாட்டு சாணத்தை பயன்படுத்தியதாக தெரி வித்துள்ளனர். இதன் மூலம் 3 மாதங்களில் 4 ஏக்கரில் 100 டன் ஒயிட்லாங் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.