தொழிலாளர் விரோத சாம்சங் நிறுவனத்தை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் ஆர்.தாண்டவராயன், வி.அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆர்டி. முருகன், கே.சுந்தரமூர்த்தி, பி.சிவராமன்,மணிகண்டன், ஐ.சேகர், பழனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.