districts

img

சாம் சங் தொழிலாளர்களுக்கு விவசாயிகள் ஆதரவு

தொழிற்சங்க உரிமை கேட்டு போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அரிகிருஷ்ணன் தலைமையில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, கோரிக்கை விளக்கி சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ரவி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பேசினர்.