districts

img

அரசு அலுவலகத்தில் காணாமல் போன கோப்புகள் விவசாயிகள் நூதன போராட்டம்

 ராணிப்பேட்டை, டிச. 21 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரத்தில் கோப்பு கள், ஆவணங்கள் காணவில்லை என்றும் தேடி வருகிறோம் என தெரிவிக்கும் வரு வாய்த்துறையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிளை தலைவர் எம். தனபால் தலைமையில் வியாழனன்று (டிச. 21) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆண்கள் கையில் தட்டேந்தியும் பெண்கள் மடியேந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ் மற்றும் வாலாஜா வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் இரா.சர வணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட அமைப்பாளர் என். காசி நாதன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, தலைவர் ச. கிட்டு, பொரு ளாளர் சி. ராதாகிருஷ்ணன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, கட்சியின் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர்.