ராணிப்பேட்டை, ஆக. 9 - அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு களாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா, வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (ஆக.9) மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க மாவட்டச் செய லாளர் எல்.சி. மணி, சி. தாமோதரன், கே. ஜெய்சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, லிகாய் மாநில செயலாளர் தா. வெங்கடேசன், விவசாய சங்க வாலாஜா வட்டார செயலாளர் என். ரமேஷ், கட்சி வாலாஜா வட்டார செயலாளர் ஆர். மணி கண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.