கள்ளக்குறிச்சி, ஜூலை 10 - தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு பண பாக்கியை வட்டியுடன் வழங்கிடக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் புதன்கிழமை (ஜூலை 10) நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது கரும்பு விவசாயிகள், தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் பணபாக்கியினை வட்டியுடன் வழங்க கோரியும் முழக்கமிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு நடைபெற்றது இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். அதில் கலையநல்லூரில் இயங்கி வந்த தரணி சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக செயல்படவில்லை. விவசாயிகளுக்கு கரும்பு பண பாக்கியினை தராமல் ஆலையை மூடியதால் விவசாயிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வங்கிக் கடனை கூட திருப்பி செலுத்த முடியாத நிலையில் புதிய கடன்களை வாங்க முடியாமலும் விவசாயம் செய்ய முடியாமலும் தவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது தேசிய கடன் தீர்ப்பாயத்தில் இருந்து ஆலையை மீட்டு, வரும் அரவை பருவத்தில் ஆலையை நிர்வாகமே நடத்த முயற்சிப்பதை வரவேற்பதாக கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கள் தெரிவித்தனர். எஃப்.ஆர்.பி நிலுவைத்தொகை யில் 50 விழுக்காடு ஏற்கெனவே தரணி நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில் மீதமுள்ள தொகையையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும், கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966 இன் படி விவசாயி ஆலைக்கு கரும்பு அனுப்பி 14 நாட்களுக்குள் எஃப்.ஆர்.பி பாக்கியினை ஆலை நிர்வாகம் தர வேண்டும் ,தவறும் பொழுது 15 விழுக்காடு வட்டியுடன் விவசாயிகளுக்கு கரும்பு பாக்கியினை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது. மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், கரும்பு விவ சாயிகளின் கோரிக்கையை உடனடி யாக நிறைவேற்றி தருவதாக கூறி னார். இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த், வேளாண்மை நேர்முக உதவியாளர் விஜயராகவன்,வேளாண் இணை இயக்குநர் அசோகன், வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி, மற்றும் தனியார் தரணி ஆலை உயர்மட்ட நிர்வாகிகள்,மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன், தரணி ஆலை சங்க செயலாளர் ஜி. அருள்தாஸ், தலை வர் வி.ரகுராமன் பொருளாளர் ஆர்.சத்தியமூர்த்தி, த.வி.ச. மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, மாவட்டப் பொருளாளர் எம்.சி.ஆறு முகம்,செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கத் தலைவர் ஜோதிராமன், தரணி ஆலைசங்க நிர்வாகிகள் கொளஞ்சி,தெய்வீகன், ராமு,தங்கராசு,செல்வராசு,சிங்காரவேல்,வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.