districts

img

குப்பை கிடங்கு அமைக்க மாற்று இடம் வட்டாட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, மே 5-

    திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை தேவனந்தல், புனல்காடு மலையடிவாரத்தில் கொட்டும் பணியை மாவட்ட நிர்வாகம் துவக்கியது.  இதனால் பாதிப்படைந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகி யோருடன், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.

   அப்போது 10 நாட்கள் அவகாசத்தில் வரு வாய் துறை மாற்று இடம் தேடி, தேவ னந்தல் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  மாற்று இடம் தேட விவசாயிகள், பொது மக்கள் முன்வர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், நில ஆவணங்கள் வரைபடங்கள் போன்ற பதி வேடுகள் விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இல்லை. வருவாய்த் துறை யிடம் மட்டுமே உள்ளது.

    எனவே, வருவாய்த்துறை ஆவணங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை வைத்து, மாற்று இடத்தை, வருவாய்த்துறையினரே தேர்வு செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பலராமன் தலைமையில் கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.