districts

வேளாண் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை, ஜன.7- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்து வந்த கோவிந்தராஜன், அலுவ லகத்துக்கு வரும் விவசாயிகளை அவமரி யாதையாக நடத்தி வந்தார். விவ சாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்தது கிடையாது. இதையடுத்து, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, விவ சாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பெரு மாள்,செயலாளர் பிரபாகரன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன் ஆகியோர் தலைமையில், விவ சாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.