கிருஷ்ணகிரி, ஆக. 11-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் தென்பெண்ணை ஆற்று கரையோரம் காவேரிப்பட்டினம் பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான நடுத்தர விவசாயிகள் தங்கள் வீட்டு உபயோகத்திற்காக ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தக்காளி சில நேரங்களில் மட்டும் அதிக விலைக்கு விற்கிறது. ஆனால் சின்ன வெங்காயம் எப்போதும் உள்ளூரிலும் வெளியூர்களிலும் நிரந்தரமாக அதிக விலைக்கு விற்பனையாவதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக 150 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ 200 க்கு விற்பனையானது. தற்போது உழவர் சந்தையில் 100 க்கு விற்பனையாகிறது. அறுவடை வரை தொடர்ந்து விலை உயர்வு கை கொடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விலை சரிந்தாலும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து விடுவோம் எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.