districts

img

தனியார் வங்கி நிர்வாக மோசடியை கண்டித்து விவசாயி போராட்டம்

திருவண்ணாமலை, பிப். 28- திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில்   தனியார் வங்கி நிர்வாகத்தின் மோசடி செயல்பாட்டை கண்டித்து, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டார். செங்கம் வட்டாட்சியர் அலுவலக நுழை வாயிலில் விவசாய சங்க நிர்வாகி கிருஷ்ணாபுரம் ராமஜெயம் என்பவர் தனியார் நிதி நிறுவனங்கள் செய்து வரும் மோசடிகள் குறித்து வட்டாட்சியரிடம்  மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கரிமலைபாடி கிராமத்தை சேர்ந்த கைம்பெண் பத்மாவை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய தனியார் வங்கி நிர்வாகிகளை கண்டித்தும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். செங்கம் அடுத்த கரிமலை பாடி கிரா மத்தில் சௌமியா மற்றும் பச்சம்மா ஆகிய இரண்டு பெண் குழந்தைகளின் தாயாரும், கணவனை இழந்த பத்மா தனது குடும்பத் தேவைக்காக செங்கம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார் . தற்போது சில மாதங்களாக தவணை தொகை செலுத்தாத நிலையில், வங்கி ஊழி யர்கள் பத்மா  வீட்டுக்கு சென்று அவ மதித்ததால், மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த பெண்ணுக்கு நீதி கேட்டும், ரூ. 5.லட்சம் நிவாரணம் கேட்டும், தன்னை தானே சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.