சென்னை, ஜன. 24- வாட்ஸ் அப் மூலம் கியூ ஆர் பயணச்சீட்டு பெறும் புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. புதிய வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக் கிண்டி மெட்ரோ ரயில் நிலை யத்தில் புதனன்று (ஜன. 24) அறிமு கப்படுத்தினார். இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ஆலோசகர் கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து இயக்குநர் மு.அ.சித்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னம், மெட்ரோ ரயில் பயணிகள் எளிய வகையில் பயணச்சீட்டுகளை பெறுவதற்காகவும், காகித பயன்பாட்டைக் குறைத்து பசுமை யான சூழலை மேம்படுத்துவதற் கான முயற்சியாகவும், மேலும் டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப் பதற்காகவும், மெட்ரோ ரயில் நிலை யங்களில் உள்ள கியூஆர் குறி யீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் கியூஆர் பயணச்சீட்டுகளை பெறு தல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் கியூஆர் பயணச்சீட்டுகளை பெறுதல், வாட்ஸ் அப், பேடிஎம், போன்பே மூலம் கியூஆர் பயணச் சீட்டுகளை பெறுதல் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி யுள்ளது.
41 மெட்ரோ ரயில் நிலையங்களில் நீட்டிப்பு
அதன் தொடர்ச்சியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் வாட்ஸ்அப் மூலம் கியூஆர் பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதியை கோயம்பேடு மற்றும் விமான நிலை யம் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் முதலில் முயற்சி செய்யப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தற்போது 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் தனியுரிமை
இந்த அமைப்பில், பயணிகள் தங்கள் மொபைல் எண்ணை கவுண் டரில் உள்ளிடுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மொபைல் எண்ணை உள்ளிட்டதும், வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு நேரடியாக அவர்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். இந்த பரி வர்த்தனை பாதுகாப்பானது, பயணிகளின் செல்போன் எண்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னத்தின் அமைப்பில் எதுவும் சேமிக் கப்படவில்லை, பயணிகளின் தனியு ரிமை இங்கு உறுதி செய்யப்படு கிறது. நல்ல வரவேற்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு மெட்ரோ பயணிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும், பசுமையான சூழலை மேம்படுத்தவும் மற்றும் டிஜிட்டல் முறைகளை ஊக்குவிக்க வும் பொதுமக்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கு வார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நம்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.