சென்னை, செப்.4- உலக பாலியல் நலதினத்தை யொட்டி சென்னை ஆகாஷ் மருத்துவ மனையில் ஸ்டெம்செல்ஸ் விழிப் புணர்வு கண்காட்சியை புதனன்று (செப்.4)தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உலக பாலியல் நலதினம் (வேர்ல்டு செக்சுவல்ஹெல்) மற்றும் ஸ்டெம் செல்ஸ் விழிப்புணர்வு தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தை மயின்மை சிகிச்சை மையம் மற்றும் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஆகியவை இணைந்து செப்.4 முதல் 8ந்தேதி வரை பாலியல்நல விழிப்புணர்வு கண்காட்சி வைத்துள்ளது. புதனன்று கண்காட் சியை மத்தியசென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டி யன் திறந்து வைத்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்நிகழ்வில் பங்கேற்ற தின் மூலம் ஸ்டெம்செல் குறித்து புதிய தகவல்களை தெரிந்துகொண் டேன். பாலியல் நலம் குறித்து பொது வெளியில் பேசத்தயங்கிய காலம் மாறிவருகிறது. பாலியல்சமத்துவக் கல்வியின் தேவையை தமிழ்நாடு மக்கள் உணர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு மருத்துவப்பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஸ்டெம்செல்ஸ் இன்டிடியூட் இதுகுறித்து பல ஆய்வு களை மேற்கொண்டு மக்களுக்கு அளப்பறிய சேவைகளை செய்துவரு கிறது. மருத்துவத்தில் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இத்துறையில் அறம்சார்ந்த விழுமியங்களோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. என் தொகுதியில் இருக்கும் இந்த ஆகாஷ் மருத்துவமனை அதீத திட்டமிடலோடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது பாராட்டுக்குறியது என்றார் டாக்டர்.ஜெயராணி பேசுகையில், பாலியல்நல மருத்துவ சிகிச்சை முறை யில் பல்வேறு சாதனைகளை ஆகாஷ் மருத்துவமனை செய்துவருகிறது. குழந்தை பேறுக்கான மருத்துவ வளர்ச்சி குறித்து சர்வதேச மற்றும் தேசிய அளவில் கருத்தரங்கம், பயிலரங்கம், விழிப்புணர்வு இயக்கம், சர்வேக்கள், கண்காட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. குழந்தையின்மை சிகிச்சை முறை என்பது மிகவும் நுட்பமானது, இதற்கு அதிகம் செலவா கும் என்ற தவறான கருத்து உள்ளது. எங்களிடம் வருபவர்களில் 22 விழுக் காட்டினருக்கு மட்டுமே அதிநவீன முறையில் சிசிச்சை தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு முறையாக பாலியல் உறவுமுறைகளை பின்பற்றி னாலே குழந்தையின்மை பிரச்சனை நிவர்த்தியாகி விடுகிறது. முன்னதாக பாலியல்மருத்துவத் துறையில் சேவையாற்றிவரும் டாக்டர் டி.காமராஜ் எழுதிய ‘ஸ்டெம் செல் என்னும் அருமருந்து’ என்ற மருத்துவ நூலையும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்டார். இந்நிகழ்வில் மருத்து வர்கள் கே.எஸ்.ஜெயராணி, நிவேதிதா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த கண்காட்சியில் பாலியல் குறித்தான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. ஸ்டெம்செல் சிகிச்சை பற்றிய நிழற்பட கண்காட்சி கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் சுமார் ரூ4ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோ தனைகள் இலவசமாக செய்யப்படு கிறது.