சென்னை, பிப்.12- சூளைப்பள்ளம் பகுதி மக்களுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய 10வது மண்டல பகுதி பொறி யாளரிடம், கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், கந்தன், டி.விஜயகுமாரி, பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, சஞ்செய் காந்தி காலனி கிளைச் செயலாளர் ஜெய ராமன் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர். அந்த மனுவில், பெரு நகர சென்னை மாநகராட்சி 137வது வட்டம், சூளைப் பள்ளம் பகுதியில் 40 வரு டங்களாக குடிநீர், கழிவு நீர் இணைப்பின்றி வாழ்ந்து வருகின்றனர். பலப்பகுதி யில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள் பதிக்கப் பட்ட பகுதிகளில், வீடுக ளுக்கு இணைப்பு வழங்கப்படா மல் உள்ளது. எனவே, அனைத்து குடியிருப்புகளுக்கும் காலதாமதமின்றி இணைப்பு களை வழங்க வேண்டும். இணைப்புகளை பெறுவதற் கான வழிமுறைகளை எளி மைப்படுத்த வேண்டும். இதற்காக சூளைப்பள்ளம் பகுதியில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இணைப்பு வழங்குவதற்கான கட்ட ணத்தை தவிர, சாலை தோண்டுவதற்கான கட்ட ணம், ஆட்கள் கூலி போன்ற வற்றை வசூலிக்க கூடாது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், குடிநீர் குழாய் பதிப்பது, பாதாள சாக்கடை அமைப்பது விடுபட்ட தெருக்களில் துரிதமாக அமைக்க வேண்டும். கழிவு நீரேற்று நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட பொறியாளர், மக்க ளுக்கு சிரமமின்றி எளிய முறையில் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடி நீர், கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படாத தெருக்க ளில் விரைந்து பணிகள் தொடங்கப்படும். 138வது வட்டம் சத்யா நகரில் குடிநீர் வராமல் உள்ள தெருக்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.