இடுகாட்டு வழிப்பாதை ஆக்கிரமிப்பு தலைவர்கள் கள ஆய்வு
ராணிப்பேட்டை, ஜூலை 17 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், மேலப் பழந்தை கிராமத்தில் தலித் சமூகத்தினர் சுடுகாட்டிற்கு செல்லும் வழி பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் மாவட்ட செயலாளர் எ.பி.எம். சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். மணிகண்டன், ஹரி. கார்த்திக், விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கிட்டு உள்ளிட்டோர் புதனன்று (ஜூலை 17) சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டனர். இதுகுறித்து விரைவில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்திட இயக்கம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.a
காலமானார்
கிருஷ்ணகிரி,ஜூலை 17- கிருஷ்ணகிரி மாவட்ட சிஐடியு செயலாளர் ஸ்ரீதரின் தாயார் என்.சாவித்திரி (80) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார். அவரது உடலுக்கு சிபிஎம் மாநகர குழு செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்டகுழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, மாநகர குழு உறுப்பினர் பி.ஜி.மூர்த்தி, முன்னாள் ஓசூர் ஒன்றிய செயலாளர் சேதுமாதவன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், சாந்தி நகர் கிளை செயலாளர் மஞ்சு,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார், அசோக் லேலண்ட் சிஐடியு அணி நிர்வாகிகள் சசிகுமார்,ரவி,டிடிகே சிஐடியு தலைவர்கள் காமராஜர்,மாது ராஜ்குமார்,ஐடிஐ அரசு ஊழியர் சங்க தலைவர் மதியழகன் ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
காவல் உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பலி
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், தென்கடப்பந்தாங்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் பிச்சாண்டி (59) மீது கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தில் பின் பகுதியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் சாலை விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி நேரில் சென்று பார்வையிட்டு பணியில் இருந்த காவலர்களிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார்.