districts

img

கள்ளக்குறிச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, செப். 29 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடை பெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 429 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம்,அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலும்,ரிஷி வந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையிலும் நடைபெற்றது.முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுநர்களுக்கு தனியார் நிறு வனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினர்.  பின்னர் ஆட்சியர் பேசுகையில், இம் முகாமில்  பல்வேறு பகுதிகளிலிருந்து 103 தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்தனர். இம் முகாமில் 1074 ஆண்களும்,1315 பெண்களும்,15 ஆண் மாற்றுத்திறனாளிகளும்,13 பெண் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2,417 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர்.   இதில் 203 ஆண்களும்,221 பெண்களும்,3 ஆண் மாற்றுத் திறனாளிகளும்,2 பெண் மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 429 நபர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் 34 ஆண்களும்,79 பெண்களும் என மொத்தம் 113 நபர்கள் வேலைவாய்ப்பிற்கான இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர், இதேபோன்று திறன் பயிற்சிக்கு 11 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  இம்முகாமில் வேலைவாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநர் லதா,மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் செங்கதிர்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி,ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி, ஒன்றியக்குழு தலைவர்  சென்னம்மாள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.