கள்ளக்குறிச்சி, நவ.21 – மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், விழுப்பு ரம் தொகுதியில் கருத்து கேட்புக் கூட்டம் துரை.ரவிக்குமார் எம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன், விசிக மாவட்டச் செயலாளர் கு.அறிவுகரசு, சிபிஎம் தலைவர்கள் டி.ஏழுமலை, எம்.செந்தில், ஒன்றிய செயலாளர்கள் ஜெ.ஜெயக்குமார்,கே.ஆனந்தராஜ், உளுந்தூர்பேட்டை நகரச்செய லாளர் பி.ஸ்டாலின், டி.வெங்கடேசன், ஷேக்சலாவுதீன், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை சங்கத் தலைவர் ஜோதிராமன் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.வி.ஏழுமலை,எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொல்லும் அதிகாரம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், உளுந்தூர்பேட்டையில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைத்து தர வேண்டும், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், எம்.பி, தொகுதி மேம்பாட்டு நிதியில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஹீமோ டயாலிசிஸ், ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும். உ.செல்லூர் கிராமத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும், சேந்தநாடு கிராமத்தில் முந்திரியை பயன்படுத்தி முந்திரி தொழிற்சாலை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். சேந்தநாடு பகுதியில் அதிகமாக குடிசை வீடுகள் உள்ள அனைவருக்கும் ஒன்றிய அரசு வழங்கும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்குவதற்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கூட்டத்தில் உளுந்தூர்பேட்டை வணிகர் சங்கங்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.