திருவள்ளூர், அக். 23- பழங்குடியின மக்கள் குழந் தைகளின் நலன் கருதி திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதி களில் உண்டு, உறைவிட பள்ளி களை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணி வட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. சிபிஎம் திருத்தணி வட்ட 24 வது மாநாடு கே.ஜி.கண்டி கையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஏ.அப்சல்அகமது தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் கே.எஸ்.சம்மந்தம் கொடியை ஏற்றி வைத்தார். வட்டக் குழு உறுப்பினர் ஏ.கரிமுல்லா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வட்டக் குழு உறுப்பினர் பி.கே.பிருந்தாவனம் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.தமிழ்அரசு துவக்கவுரை யாற்றினார். வட்ட செயலாளர் வி.அந்தோணி வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.சம்பத் வாழ்த்தியும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் மாநாட்டை நிறைவு செய்தும் பேசினார். வட்டக் குழு உறுப்பினர் ஜி.சின்னதுரை நன்றி கூறினார். தீர்மானங்கள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும், திருத்தணி இந்திரா காந்தி நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், விசைத்தறி பூங்கா அமைக்க வேண்டும், மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. வட்டக்குழுதேர்வு 11 பேர் கொண்ட திருத்தணி வட்ட குழுவின் செயலாளராக வி.அந்தோணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.