மீஞ்சூர், மே 21
தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக போராடும் போது மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தும் போராட்டங்களிலும் தீவிர மாக பங்கேற்க வேண்டும் என்று சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கேட்டுக்கொண்டார்.
ஒப்பந்த முறையை அகற்ற வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியத்தை 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத்தின் 7 இடங்களில் இருந்து திருச்சி நோக்கி சிஐடியு நடை பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது :
வேலை செய்து வாழக்கூடிய மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வாயில் கூட்டங்கள், பேரவை கூட்டங்கள், கொடியேற்று விழாக்கள் என்று ஏராளமாக நடத்துகிறோம்.
அதற்கு மேலாக தொழிலாளர்களை மட்டு மல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் திரட்ட கூடிய இயக்கத்தை சிஐடியு நடத்துகிறது. கோரிக்கைகளுக்காக ஒன்று பட்டு போராடக்கூடிய சூழலில், அந்த தொழிலாளர்களின் ஒற்று மைக்கு வேட்டு வைக்கும் முறை யில், மத்தியில் ஆளக்கூடியவர்க ளும், அவர்களை சார்ந்தவர்களும், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், சாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற வகையில் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
முதலாளிகளின் சூழ்ச்சிக்கு எதி ராக, தொழிற்சங்க உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை பாது காக்க சிஐடியு தொடர்ந்து போராடி வருகிறது.
இடது ஜனநாயக மாடல்
கேரளாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான நியூஸ் பிரிண்ட் தொழிற்சாலையை ஒன்றிய மூட நினைத்த போது, மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கேரள இடது முன்னணி அரசு அதை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் எனக் கேட்டார்கள். அதற்கு ஒன்றிய அரசு வழங்க முடியாது. ஏலத்தில் வேண்டுமானால் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியது. கேரள அரசு ஏலத்தில் பங்கேற்று அதை எடுத்து கேபிஎல் என்ற பெயரில் தற்போது லாபகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதுதான் இடதுஜனநாயக மாடல்.
தலித் மக்கள் மீது தாக்குதல்கள்
நாடு முழுவதும் தலித் மக்க ளுக்கு எதிரான தாக்குதல்கள் அதி கரித்து வருகின்றன. இந்தியா ஒரு அபாயகரமான எரிமலையின் மீது அமர்ந்துள்ளது போன்ற நிலையை பாஜக உருவாக்கி வருகிறது. இவர்கள் ஆட்சியில் நீடித்தால் நாட்டு மக்களின் ஒற்றுமையும், வாழ்வாதாரமும் நாசமாகும். மதக்கலவரம் எந்த மதத்தின் பெயரில் நடைபெற்றாலும், எந்த கடவுளின் பெயரில் ஏற்பட்டாலும் அது மக்களுடைய வாழ்க்கையை சீரழிக்குமே தவிர அதனால் எந்த பலனும் கிடையாது. இதை உணர்ந்து தொழிலாளி வர்க்கம் இதற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது என்றார். \
ஒன்றிய அரசு துறைகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப எந்த நடவடிக்கையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக அனைத்து துறைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு வரு கிறது. அதற்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் மக்கள் ஒற்று மையை வலியுறுத்தும் போராட்டங் களிலும் தொழிலாளர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று ஏ.கே.பத்மநாபன் கேட்டுக் கொண்டார்.