ஆம்பூர்,ஜூலை 1-
ஆம்பூர் தாலுகா மாத னூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதி யில் சுப்பிரமணி என்பவ ரின் மாந்தோப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் புகுந்தன.
5 பெரிய யானை 2 குட்டியானைகள் அட்ட காசம் செய்தனர். வனத் துறையினர் யானை களை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த நிலையில், மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டு பகுதியில் அட்டகாசம் செய்தது. இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வரு கிறார்கள்.