சென்னை, டிச. 4 - மின்வாரியத்தில் 65 ஆயிரம் காலிப்பணி யிடங்களை நிரப்பக்கோரி செவ்வாயன்று (டிச.3) மாநிலம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்தடை நீக்கப் பிரிவுகளுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும், 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படும் வரை மாதம் ரூ.5ஆயிரம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும், கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் பணியை பாதிக்கும் நெட்ஒர்க் பிரச்சனையை சரி செய்ய வேண்டும், அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு களை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு தினக்கூலியை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னை தெற்குகிளை-1ன் சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கே.கே.நகர் கோட்ட தலைவர் டி.சத்யநாராயணன் தலைமை தாங்கினார். சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளைச் செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை, பொரு ளாளர் எஸ்.குமார் உள்ளிட்டோர் பேசினர். சென்னை தெற்கு கிளை-2ன் சார்பில் பல்லாவரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளை-2ன் தலைவர் பா.டில்லிகுமார் தலைமைதாங்கினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.விஜய லட்சுமி, கிளைச் செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர். மத்திய சென்னை கிளை சார்பில் வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் வி.சீனி வாசன் தலைமையில் மாநில துணைத்தலை வர் எம்.தயாளன், மாவட்ட பொருளாளர் எஸ்.முருகவேல் உள்ளிட்டோர் பேசினர்.