districts

img

எட்டாவது ஊதிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் அஞ்சல் ஓய்வூதியர் சங்க ஆண்டு பேரவை

வேலூர், டிச. 21 - அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட ஆண்டு பேரவை கூட்டம் வேலூர் பெல்லியப்பா அரங்கில் மாவட்ட தலைவர் ஆர்.சதானந்தன் தலைமையில் நடைபெற்றது.   செயல் தலைவர் ஜி.நரசிம்மன் வர வேற்புரையாற்றினார் மாவட்ட செய லாளர் ஏ.கதிர் அகமது செயலாளர் அறிக்கை யையும், பொருளாளர் கே.ஆறுமுகம் வரவு செலவு கணக்கு அறிக்கையும் முன்வைத்தனர்.  மாநகர தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.ஞானசேகரன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பன்னீர் செல்வம், மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வு பெற்ற சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாவட்டச் செய லாளர் பி.லோகநாதன், பிஎஸ்என்எல் டாட் பென்ஷனர்ஸ் அஸோசியேஷன் மாவட்டத் தலைவர் தங்கவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.மூர்த்தி, எம்.அப்துல் கலாம் ஆசாத், செயற்குழு உறுப்பினர் காயத்ரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முடிவில் கே.லக்ஷ்மிபதி நன்றி கூறினார். எட்டாவது ஊதிய குழுவை உடனடி யாக அமைக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத டிஏ/டிஆரை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சலுகைகளை மூத்த குடிமக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். 110 வது நாடாளுமன்ற நிலைக்குழுவில் பரிந்துரைகள் மருத்துவ படியை மாதம் ரூ.3000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் 65,70, 75 வயது முடிந்த ஓய்வூதி யர்களுக்கு முறையே 5, 10, 15 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தையே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கம்யூடேஷன் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.