districts

இருளர் குடும்பங்களுக்கு குடிமனை பட்டா

திருவள்ளூர், பிப்.4- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பால் வரு வாய்த்துறையினர் வாசனாம்பட்டு இருளர் இனத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு இலவச குடிமனை பட்டாக்களை வழங்கியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருவள்ளூரிலிருந்து 37 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள திருமணி குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனாம்பட்டு கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருளர் இன மக்கள் கிராம நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வரு கின்றனர். குடிமனை பட்டா உள்ளிட்ட எந்த அடிப்படை தேவைகளும் இன்றி 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு குடிமனை பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் அட்டை போன்ற ஆவ ணங்கள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை.  வாச னாம்பட்டு எங்கு உள்ளது என்று அதிகாரிகள் கேட்கும் அளவிற்கு நிர்வாகத்தில் மோசமான நிலைமை இருந்தது. இந்த நிலையில் வாசனாம்பட்டு இருளர் இன மக்கள் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தில் இணைந்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பல முறை கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த னர். இதன் பின்னரும் நட வடிக்கை எடுக்கவில்லை.இதனை த் தொடர்ந்து கடந்த நவ 21 அன்று திருவள்ளூர் கோட்டாச்சிரிடம் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி னர். இந்நிலையில் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில், 15 தினங்களுக்குள் இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்படும் என உறுதியளிதார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக வாசனாம்பட்டில் உள்ள ஒரு இருளர் இன பெண்ணுக்கு மட்டும் ஒரு பட்டாவை மட்டும் அடையாள பூர்வமாக வழங்கினர். இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் மீது நம்பிக்கையை இழந்த நிலையில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மீண்டும் பிப்.8 அன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த தகவலை அடுத்த திருவள்  ளூர் வட்டாட்சியர்  வெள்ளி யன்று (பிப்4), வாசனாம்பட்டு கிராம த்திற்கே சென்று இருளர் இனத்தை சேர்ந்த 15 குடும்பங்களுக்கு இலவச பட்டாக்களை வழங்கினார். இந்த பட்டாவை பெற்றுக்கொண்ட லட்சுமி என்பவர்,  எனது 45 ஆண்டு காலத்தில் இன்றைக்கு தான் என் அம்மா முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன். இதற்காக முன்னின்று போராட்டம் நடத்தி பட்டாக்களை பெற்று கொடுத்த சங்க தலை வர்களுக்கு கண்ணீர் மல்க  நன்றி தெரிவித்தார். மேலும் தொகுப்பு வீடுகள், சாலை, சாதி சான்றிதழ், சுடுகாடுப்பாதை போன்ற வற்றை பெற்றுத் தர வேண்டும் என அம்மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், மாநில துணைச் செயலாளர் இ.கங்காதரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.அற்புதம், வாலிபர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டப் பொருளாளர் ஆர்.சுகுந்தன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எஸ்.தமிழரசி, பொருளாளர் எஸ்.தேவி, அஜித் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.