districts

img

தூசி படியும் காவல்துறை புகார் பெட்டி

விழுப்புரம்,டிச.25- நாட்டில் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது குற்ற சம்ப வங்கள் பெருகி வருகிறது. இதனை தடுத்து, தற்காத்து கொள்ள உடனடியாக காவல்துறையை அனுகும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. பெண்களுக்கு எதிராக ஈவ்டீசிங் செய்தால் நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜெயக்குமார் மற்றும் டிஎஸ்பி சங்கர் ஆகி யோர் இதனை துவக்கி வைத்தனர். இந்த இருவரும் மாறுதலானதும் அடுத்தடுத்து வந்த அதிகாரிகள் இந்த புகார் பெட்டியை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் பூட்டியே கிடக்கிறது. இது தெரியாமல் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் இந்த புகார் பெட்டி கடிதங்களை போட்டு வந்தனர். இந்த புகார் பெட்டிக்கு வரும் கடிதங்கள் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான் மாணவிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.