districts

img

தேர்தல் வாக்குறுதியை கேட்டால் திமுக-வை அழிப்பேன் என்பதா? பிரதமருக்கு துரைமுருகன் கண்டனம்

வேலூர். மார்ச் 22 - வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த் அறிமுக பொதுக்கூட்டம் வேலூர் கண்ணா கலையரங்கம் அருகில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, நாங்கள் 2021 தேர்தலில் மக்களுக்கு அளித்து நிறை வேற்றிய வாக்குறுதிகளை சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி திமுகவையும் அதன் கூட்டணியும் துடைத்தெறிந்து, ஒழிப்போம் என பேசுகிறார். இதுவா தேர்தல் வாக்குறுதி? ஏனென்றால் கடந்த 2014 தேர்தலின் போது வெளிநாட்டில் கோடிகோடியாக பதுக்கிய பணத்தை மீட்டு கொண்டு ஒவ்வொரு வரின் கணக்கிலும் ரூ.15லட்சம் போடுவதாக சொன்னார். அதை செய்யாததால் மீண்டும் அவ்வாறு வாக்குறுதி அளிக்க பயந்து இப்படி பேசுகிறார். காங்கிரஸ், திமுகவும் வாரிசு அரசியல் செய்கிறது என்று பேசுகிறார். நேரு குடும்பம் நாட்டை சீரழித்தது என்கிறார். ஆனால் நாட்டின் சுதந்திரதிற்காக 14 ஆண்டு கள் சிறைவாசம் அனுபவித்தார் நேரு. தலை வர் கலைஞர் மொழி போராட்டத்தில் ஈடு பட்டு சிறை சென்றவர். முதலமைச்சர் ஸ்டாலின் மிசாவில் சிறைக்கு சென்றவர். பிரதமரே, நீங்களோ உங்களது கட்சி தலைவர்களோ சிறைக்கு சென்றதுண்டா? தற்போது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சீக்கியர்கள் புத்தர்கள் ஜெயினர்கள் பார்ஸியர்கள் இந்துக்கள் கிறிஸ்த வர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என கொண்டு வந்துள்ளனர். ஆனால் இஸ்லாமி யர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுக்க மறுப்பது அவர்களின் மத வெறியையும் வஞ்சகத்தையும் காட்டு கிறது. இஸ்லாமியர்கள் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக திப்பு சுல்தான், ஹைதர் அலி முதல் கண்ணியமிகு காயிதே மில்லத் என ஏராளமானோர் தங்களை ஈடு படுத்திக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட செய லாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கி னார். திமுக மாவட்ட அவைத்தலைவர் முக மது சகி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலை வர் டீக்காராமன், சிபிஎம் மாவட்ட செய லாளர் எஸ்.தயாநிதி, சிபிஐ மாவட்ட செய லாளர் லதா, விசிக மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், மதிமுக கவுதமன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். வேலூர் சட்ட மன்ற உறுப்பினரும் திமுக மாநகர செய லாளர் கார்த்திகேயன் வரவேற்றார். நிறைவில் திமுக பகுதி செயலாளர் சுந்தரவிஜி நன்றி கூறினார்.