districts

img

பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்

திருவள்ளூர், அக். 7- பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரி கையாளர்கள்  குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவி ரூ. 5 லட்சத்தை உயர்த்தி 10 லட்சமாக வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு டியுஜெ மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புரு ஷோத்தமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட, “ஈ நாடு” தெலுங்கு நாளிதழில் மூத்த செய்தியாளராக சுமார் 30 ஆண்டுகாலம்பணியாற்றிய நரசம்மா (வயது 58), வெள்ளியன்று (அக்.4), காலமானார். கடந்த 4 மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நரசம்மா வெள்ளியன்று காலமானார். அவரது உடல் சனிக்கிழமையன்று திருவள்ளூரில் தகனம் செய்யப்பட்டது. ஈ நாடு தெலுங்கு நாளிதழில்பணியாற்றிய பெண் செய்தியாளரான நரசம்மா குடும்பத்தின் ஏழ்மை நிலையை கணக்கில் கொண்டு, பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரி கையாளர்கள்  குடும் பத்திற்கு வழங்கும் நிதி உதவி ரூ. 5  லட்சத்தை உயர்த்தி, 10 லட்சமாக, மனித நேயத்துடன் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை  டியுஜெ மாநில தலை வர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். டியுஜெ அஞ்சலி மறைந்த  நரசிம்மா உடலுக்கு டியுஜெ  மாநில தலைவர் பி.எஸ்.டி.புருஷோத் தமன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, டியுஜெ திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மா.கருணாநிதி, கே.வெங்கட், அண்ணாதுரை, பெ.ரூபன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.