கொரோனா காலத்தில் உயிரை துச்சமெனக் கருதி கோவிட் நோயாளிகளுக்காக பணியாற்றிய ஹவுஸ் கீப்பிங் உதவியாளர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிஆர்இயூ சார்பில் பெரம்பூரில் உள்ள தென்னக ரயில்வே தலைமை மருத்துவமனை முன்பு வெள்ளியன்று (பிப். 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயல் தலைவர் அ.ஜானகிராமன், துணைத்தலைவர் சிவக்குமார், தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன்், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.