கிருஷ்ணகிரி, மே 4-
பாப்பானுார் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றின் மீது கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பானுார் கிராமத்தில் கடந்த ஒரு வராத்திற்கு முன்பு புதிய கழிவு நீர் கால்வாய் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 14ஆவது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் கால்வாய் கட்டப்பட்டது.
இது அந்த கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஆழ்துளை கிணறு மீது அமைக்கப்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கால்வாய் அமைக்கப்பட்ட ஒப்பந்ததார் மீது நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணற்றை மீட்டெடுத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.