அம்பத்தூர், பிப். 12- ஆவடியில் ‘சமூக ஊடகங்கள் மனித உறவுகளை வளர்க்கிறதா? சிதைக்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடை பெற்றது. ஆவடி திண் ஊர்தி தொழிற்சாலை தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட முத்தமிழ் மன்றத்தின் சார்பில் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் நாள் விழா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 10, 11) ஆவடியில் நடைபெற்றது. தலை வர் ச.கதிர்வேல் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஆ.சந்திரசேகர், செய லாளர் இரா.செங்குட்டுவன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திண் ஊர்தி தொழிற்சாலையின் தலைமை பொது மேலாளர் வி.ரா.ரம்பாட், இயக்கி தொழிலக தலைமை பொது மேலாளர் ராஜீவ் மாத்தூர், கவிமாமணி இர.கங்கை மணிமாறன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் பள்ளி மாண வர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. சித்தன் தெ.ஜெயமூர்த்தி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. போதிதர்மா சிலம்பம் தற்காப்புக் கலை பயிற்சி பள்ளி மாணவர்களின் தனித்திறன் நிகழ்ச்சி நடைபெற்றது. ” மதுக்கூர் ராம லிங்கம் தலைமையில் ‘சமூக ஊடகங்கள் மனித உறவுகளை வளர்க்கிறதா? சிதைக்கிறதா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேராசிரியர்கள் விஜயகுமார், மணிமேகலை சித்தார்த்தன், முனைவர்கள் மகா சுந்தர், சந்தான கிருஷ்ணன், சுந்தரவள்ளி மற்றும் கோவை தனபால் ஆகியோர் பேசினர். நூலகப் பொறுப்பாளர் இரா.முமூர்த்தி நன்றி கூறினார். திண் ஊர்தி தொழிற்சாலை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.முரளிதரன், அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் க.விஜயசீலன், முத்தமிழ் மன்ற பொருளாளர் அ.த.ஜெயவேல், துணைத் தலைவர் நாகரத்தினம், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.