சென்னை, நவ.14- சென்னை கிண்டி அரசு மருத்துவமனை யில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அரசு டாக்டர்க ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தினர் வியாழ னன்று(நவ.14)ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கடலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் அரசு மருத்துவ சங்க நிர்வாகி கள் கேசவன், ஸ்ரீதர், கோபால், கணேசன், சசிகுமார், மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தலைவர் கண்ணன், செய லாளர் வினோத்குமார், டாக்டர் முகுந்தன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சங்கங்க ளின் கூட்டமைப்பு வேலூர் மாவட்டம் சார்பில் அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் வேந்தன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முரளி, ஜீவநாதன் மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் ஜீவநாதன், எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில துணைதலைவர் ஹேமசந்திரன், ராஜேந்திரன் (மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம்) மற்றும் கோமளேஸ்வரி ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.