திருவள்ளூர், மார்ச் 25- பாஜக மதவெறியை மட்டுமல்ல மிகப்பெரிய ஊழலை உருவாக்கும் கட்சியை அகற்ற, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணி ஊழி யர்கள் வலுவாக தேர்தலில் பணியாற்ற வேண்டும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி வி.ஜானகிராமன் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 24), பெரியபாளையத்தில் நடைபெற்றது. இதற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலை யரசன் தலைமை தாங்கி னார். இதில் இந்துத்துவா அபாயம் என்ற தலைப்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி வி.ஜானகி ராமன் கலந்துரையாடினார். இந்தியா கூட்டணியை வாலிபர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற தலைப் பில் வாலிபர் சங்கத் தின் மாவட்ட முன்னாள் செயலாளர் டி.பன்னீர் செல்வம் விளக்கவுரை யாற்றினார். இளைஞர்களை அணிதிரட்டுவோம் என்ற தலைப்பில் வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் டி.மதன் பேசினார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி வி.ஜானகிராமன் பேசுகை யில், பாஜக ஆட்சியில் கடு மையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தியுள் ளது. முறையற்ற வேலை வாய்ப்பு, சமத்துவமற்ற பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாஜக மதவெறியை மட்டு மல்ல மிகப்பெரிய ஊழலை உருவாக்கும் கட்சியாகும் . இந்த மதவெறி கட்சியை அகற்ற வாலிபர்கள் வலு வான பிரச்சாரத்தை முன்னெ டுக்க வேண்டும் என்றார்.மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.விஜயகாந்த் நன்றி கூறினார்.