சென்னை, ஏப். 27- மாணவர்கள் வன்முறை செயல்களில் ஈடுபடக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அவரது முகநூல் பதிவில் மாணவர்களுக்கு அறிவுரை வீடியோவில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார். இன்னொரு இடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கக்கூடிய இரும்பு மேஜை மற்றும் நாற்காலியை மிகவும் சிரமப்பட்டு உடைக்கின்றனர். ஆசிரியர்கள் கடந்த 3000 ஆண்டு மனித வரலாற்றைப் பற்றி கற்றுக் கொடுப்பார்கள். இவர்கள் தான் கணினி கற்றுத் தருவார்கள். இவர்கள் தான் விளையாட்டு கற்றுக் கொடுப்பார்கள். அப்போது இவர்கள் தான் நமக்கு ஆதாரம். இவர்கள் நமக்கு மிகப்பெரிய சொத்து என்றிருக்கையில் அறிவையும், செயல் திறமையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் ஏன் செய்கின்றனர். பள்ளி கூடத்தில் வன்முறை செய்யக்கூடியது என்பது சட்டப் படியும், JJ Act ன் படியும் இது ஒரு குற்ற மாகும். சட்டம் உங்களுக்கு சில பாதுகாப்பு கொடுத்திருந்தாலும் இது ஒரு குற்றமாக தான் கருதுகிறார்கள். தயவு செய்து இந்த குற்றத்தை நீங்கள் செய்யாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.