districts

சென்னை மாநகராட்சி பள்ளிகளை மூடாதீர்!

சென்னை, நவ. 3- சென்னை மாநகராட்சிக்கு கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் ஸ்கூல்  ரோடு ஆரம்ப பள்ளியை மூடும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  சென்னை மாநகரத்தில் ஏழை, எளிய மக்களின் கல்வி வாய்ப்பை  உறுதி செய்யும் ஒரே வாய்ப்பாக  சென்னை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டு களாக சென்னை மாநகராட்சி பள்ளி யின் தரத்தை, உள் கட்டமைப்பை,  புறத்தோற்றத்தை மேம்படுத்து வதற்கும், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை மேம்படுத்தி, கல்வி சூழலை உறுதி செய்வ தற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் சென்னை பள்ளிகளில் குறிப்பிட்ட சில  பள்ளிகளில் மிக அதிக எண்ணிக்கை யிலான மாணவர் சேர்க்கை நடை பெற்று வருகிறது. முதலமைச்சரின்  தொகுதியான கொளத்தூர் மற்றும்  திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி களை உள்ளடக்கியது மண்டலம் 6 ஆகும். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் மார்க்கெட் பகுதி யில் இருக்கும் சென்னை மேல்நிலைப் பள்ளியில் மிக அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு பெரம்பூர், கொளத்தூர்,

ஓட்டேரி, புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் கல்வி வாய்ப்புக்கான உத்தரவாதத்தை இந்த பள்ளி அளித்து வருகிறது. இந்த குறிப்பிட்ட பகுதிகளில் அருந்ததியர் மற்றும் ஆதி ஆந்திர மக்கள் குவியலாக வாழ்ந்து வரு கின்றனர். அவர்களின் தாய்மொழி யான தெலுங்கு மொழிக்கான வாய்ப்பை வழங்குவது என்ற நோக்கத்தோடு தான் இந்த வளாகத்தில் உள்ள தெலுங்கு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. இந்த பள்ளியில் மாணவர்  சேர்க்கை எண்ணிக்கை குறைவு  என்பதை காரணம் காட்டி இப்போது  சென்னை மாநகராட்சி இப்பள்ளியை மூடுவது என முடிவு செய்து, அருகாமையில் உள்ள நடுநிலைப் பள்ளியோடு இணைப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். தெலுங்கு மற்றும் ஆங்கில வழி ஆரம்பப் பள்ளியாக இருந்த இப்பள்ளியை மூடுவதன் மூலம் மொழிவழி சிறுபான்மை மக்கள் குறிப்பாக வாழ்நிலையில் மிகவும் எளிய நிலையில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் தங்களுடைய கல்வி வாய்ப்பை இழப்பார்கள். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்ற காரணத்தை மாநகராட்சி சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆரம்பப் பள்ளியில் 2004ஆம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியர் இல்லாத ஒரு பள்ளியாகவும், ஒரே ஒரு தெலுங்கு மொழி ஆசிரியரை கொண்ட பள்ளியாகவும் செயல்பட்டு உள்ளதையும் மாநகராட்சியே சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக அரசு கூறுகிறது. ஆனால் சென்னை மாநகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு தலைமை ஆசிரியர் இல்லாமல், பிற ஆசிரியர்கள் கூட தேவையின் அடிப்படையில் நியமிக்கப்படாத சூழ்நிலையில் யார் இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பார்கள் என்பதைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறையும், பார்வையும் இல்லாமல் மாநகராட்சி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளது. இந்த தவறை சரி செய்வதற்கு பதிலாக அந்த பள்ளியை இழுத்து மூடுவது என சென்னை மாநகராட்சி எடுத்திருக்கும் முடிவு தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியை கேள்விக்குறியாக்கும் செயலாகும். அத்தோடு ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள கல்வி வளாகங்களை ஒருங்கிணைப்பது, அதாவது பல இடங்களில் செயல்படும் கல்வி நிலையங்களை மூடிவிட்டு ஒரே இடத்தில் கல்வி நிலையத்தை தொடங்குவது என்ற  வழிகாட்டலாகும்.

இதனைத் தமிழ்நாடு அரசும், கல்வியாளர் களும் ஏற்றுக் கொள்ளாத நிலை யில் சென்னை மாநகராட்சி நடை முறைப்படுத்துவது எந்த விதத்தி லும் நியாயம் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே முதலமைச்சர் தலை யிட்டு சென்னை மாநகராட்சியின் பெரம்பூர் ஸ்கூல் ரோடு ஆரம்பப் பள்ளியை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்றும், மொழிவழி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் போதுமான ஆசிரியர், ஊழியர்கள் நியமித்து வளாக மேம்பாட்டை உறுதி செய்து இப்பள்ளியை  நடத்துவதற்கு முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். மேற்சொன்ன கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத் தில் ஈடுபடுவோம். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.