districts

img

கிராமங்களைத் தேடி திட்டங்களை சேர்க்கும் திமுக அரசு: அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

 கள்ளக்குறிச்சி,செப்.4- கிராமங்களை தேடி திட்டங்களை கொண்டு சேர்க்கும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்று  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழச்சியில் வாணாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஞாயிறன்று (செப்.3) திறந்து  வைத்து 151 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி  மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்,  நாடியை பிடித்து பார்த்து நோய்க்கான மருந்தினை வழங்குவது போல மக்களின் தேவையை அறிந்து நலத் திட்டங்களை இந்த அரசு செய்துவருகிறது. வட்டாட்சியர் அலுவலகம் என்பது நகர்  பகுதியில் தான் இருக்கும் என்ற நிலையை  மாற்றி கிராமத்திலும் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. வாணாபுரத்திற்கென்றே வட்டாட்சியர் அலுவலகத்தை கொடுத்தவர் முதலமைச்சர் ஆனால் அதற்கு தூண்டு கோளாக இருந்தவர் நம்முடைய ரிஷிவந்தி யம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன். முதற்கட்டமாக அரசின் சார்பில் ரூ.7.56 கோடி செலவில் இவ்வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.44.52லட்சம்  மதிப்பீட்டில் பவர் டில்லர், வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.18.6 லட்சம் மதிப்பீ லான வேளாண் இடு பொருட்கள்,  தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில்  3 பயனாளிகளுக்கு ரூ.28லட்சம் மதிப்பீட்டில்  பழக்கன்றுகள் மற்றும் மண்புழு படுக்கை எனமொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ1.20கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.  புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு கட்டிடம் வழங்கிய புனித தொன் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் தொன் போஸ்கோக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து கவர வித்தார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, ரிஷிவந்தியம்  ஒன்றியக்குழு தலை வர் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணைத்  தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர் கள் கலந்து கொண்டனர்.