districts

img

குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் து.மு.கதிர்ஆனந்த் தீவிர பிரச்சாரம்

வேலூர்,ஏப்.15 - வேலூர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் திமுக து.மு.கதிர்ஆனந்த் குடி யாத்தம் சட்டமன்ற தொகுதி பேர்ணாம்பட்டு வட்டத்துக்குட்பட்ட குண்டலப்பல்லி, சாத்கர், எருக்கம்பட்டு, பத்தலபல்லி, சின்னதாமல்செருவு, மசிகம், பாலூர் ஆகிய பகுதி களில் பிரச்சாரம் மேற் கொண்டார். இதில் குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர் அமுலு விஜயன், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனன், துணைத்தலைவர் லலிதா டேவிட், விஜயகுமார், ஒன்றிய பொருளாளர் சிவக்குமார், நகர செய லாளர் ஆலியார் ஜூபேர் அகமத், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் விசு, மாணவரணி அமைப்பா ளர் அரிநாத், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர்  கிருஷ்ண வேணி ஜெலந்தர், பத்தலப் பல்லி சிபிஎம் கிளை  உறுப்பி னர்கள் ஜி.ஆர்.கோவிந்த சாமி, கோவிந்தன், வெங்கடே சன், பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வேட்பாளர் கதிர்ஆனந்த் பேசுகையில், பத்திரப்பல்லி விரைந்து கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும்,சின்னதாமல் செருவு வீடில்லா மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா  மற்றும் வீடுகட்டி தர நட வடிக்கை எடுக்கப்படும். முத லமைச்சரிடம் அனுமதி பெற்று காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பேர்ணாம்பட்டு, குடி யாத்தம் பகுதிகளில் இரண்டாவது கட்ட திட்ட மாக அமல்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.