கிருஷ்ணகிரி, ஜூன் 12-
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றியத்திலுள்ள மதகொண்டபள்ளி அருகில் டிஸ்கவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோடை விடுமுறைக்கு பிறகு திங்க ளன்று (ஜூன் 12) திறக்கப் பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனர் தாளாளர் பரத் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். மேலாண்மை பகுதியை ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷூம், நிர்வாக பகுதியை தளி தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனும், கணினி ஆய்வகத்தை ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யாவும், ஆளுமை அறிவி யல் பகுதியை துணை மேயர் ஆனந்தய்யாவும் திறந்து வைத்தனர். துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.