districts

img

சட்டத்தை மீறி மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூல்

திருவண்ணாமலை,ஜுலை29-

   திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த தென்னாங்கூர் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில், அரசு விதி முறைகளை மீறி, மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்துள்ளதை திரும்ப வழங்க வேண்டும் என,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

     அந்த மனுவில், தமிழக அரசு, தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி களில் 2008 ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம் விலக்கு அளித்துள்ளது. ஆனால் தென்னாங்கூர் திருவள்ளுவர்அரசு  கல்லூரியில் மாண வர்கள் சேர்க்கையின் போது பொது வாக கல்விக்கட்டணம் வசூல் செய்யப் பட்டுள்ளது.

     இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களிட மும்  கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கு என்கிற விதிக்கு முற்றிலும் முரணான செயலாகஉள்ளது.   எனவே விதிகளுக்கு முரணாக மாற்றுத்திற னாளி மாணவர்களிடம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், வசூலித்துள்ள கல்விக்கட்ட ணத்தை, மாணவர்களிடம் திரும்ப வழங்க வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

   இதையடுத்து, கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவன் யுவராஜன், மாணவி லாவண்யா ஆகியோரிடம் பெறப்பட்ட கல்வி கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. மேலும், கல்லூரி யில் உள்ள பிற மாற்றுத்திறனாளி மாண வர்களிடம் பெறப்பட்ட கட்டணத்தை, திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொது செய லாளர் ப.செல்வன், வாலிபர் சங்க முன்னாள் மாநில குழு உறுப்பினர் அப்துல்காதர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் யாசர் அராபத், வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.