கள்ளக்குறிச்சி நகராட்சி கேசவலு நகரில், மாற்றுத்திறனாளி பயனாளியின் ஆவின் பால் பொருட்கள் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் இங்கு கிடைக்கும் என்றும் இதனை பொதுமக்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார். மேலும், இதுபோன்ற சுய தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்தல் உள்ளிட்ட முன்னேற்றத்திற்கான அனைத்து வகையான முயற்சிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் என்றும் துணை நிற்கும் என்று கூறினார்.