கடலூர்,டிச.28- நகர்புற உள்ளாட்சி தலை வர்களை நேரடியாக தேர்வு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். வடலூரில் செவ்வா யன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து உள்ளனர். தமிழகத்தில் 73 லட்சத்து 33 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். மாநிலத்தில் சராசரியாக ஐந்தில் ஒரு பகுதியினர் வேலையில்லாமல் உள்ளனர். மாநில அரசின் பல்வேறு துறைகளில் நான்கு லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முந்தைய அரசு இந்தப் பணியிடங்களை சர்ப்ளஸ் பணியிடங்கள் என்று குழு அமைத்து பரிந்துரையை பெற்றுள்ளனர் அதனை அமலாக்க கூடாது என்று வலியுறுத்துகிறோம். மத்திய, மாநில அரசு துறை களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் நுண் கடன் நிறுவனங்கள் அதிக வட்டி வசூலிப்பதை கண்காணிக்க மாவட்ட அளவில் குறைதீர்க்கும் அலுவலர்களை நியமிக்க வேண்டும், புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களை அறிவிக்கவேண்டும். சாதிய ஆணவக் கொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக பூர்வமாக நடத்துவதற்கு நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு மறைமுக இல்லாமல் நேரடி தேர்தலை நடத்த வேண்டும்.. இவ்வாறு அவர் தெரிவித்தார்.