districts

img

இடிந்து விழுந்த குடிசைகள் பரிதவிக்கும் ஏழைகள்

கள்ளக்குறிச்சி,டிச.3 – உளுந்தூர்பேட்டை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, பத்துக்கும் மேற்பட்ட கூரை வீடுகள் விழுந்து சேதம் அடைந்துள்ளதால் கிராம மக்கள் வீடு இன்றி தவித்து வரு கிறார்கள். பெஞ்சல் புயல் எதிரொலியால் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை பகுதியில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி,குளம், குட்டை நிரம்பி வழிகின்றன.  இந்த நிலையில் வைப்பாளையம், மயி லங்குப்பம், திமி ரெட்டிப்பாளையம், களத்தூர்,  கிருஷ்ணா ரெட்டி பாளை யம், சேந்தமங்கலம் பகுதியில் பெய்த கன மழையால் அங்குள்ள ஏரி ஓடை கள் நிரம்பியது. இதனால் ஊருக்குள் புகுந்த மழைநீர், குடிசைகளை சூழ்ந்துள்ளது. தேங்கிய தண்ணீர் வெளியேற வழி யில்லாமல் பத்துக்கு மேற்பட்ட கூரை  வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து ள்ளது. மேலும், வைப்பாளையம் கிரா மத்தில் அரசு கட்டிக் கொடுத்த பழைய தொகுப்பு வீடு முற்றிலும் தரைமட்ட மாக இடிந்து கீழே விழுந்துள்ளது.  இந்த வீடுகளில் இருந்தவர்கள், முன் எச்சரிக்கையாக வெளியேற்றி அரசு அலுவலகங்களில் தங்க வைத்தனர். இதனால், அனைவரும் உயிர் தப்பினர். அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. சுவர் இடிந்து விழுந்த  வீடுகள் அதி காரிகள் யாரும் இதுவரை பார்வை யிடவில்லை என்று குற்றம் சாட்டிய கிராம மக்கள் வீடின்றி தவிக்கும் தங்களுக்கு தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரைக்கும், தங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளனர்.