அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்தை கைவிடக் கோரி செவ்வாயன்று (மார்ச் 12) புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் கனிஷ்கா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிளைச் செயலாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பேசினர்.