விருத்தாசலம் உய்யக்கொண்டராவி, தெற்கு சேப்பிளாநத்தம், பெரியவடவாடி ஆகிய கிராமங்களுக்கு குடி மனைப்பட்டா வழங்கக் கோரியும், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வட்டாட்சியரால் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்டத் தலைவர் வீரமணி, பொன்னேரி கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் துணை வட்டாட்சியர் பூர்ணிமா வினிதாவிடம் மனு அளித்தனர்.