மின் வட்டத்திற்குள் விருப்ப ஊர் மாறுதல் உத்தரவு பெற்றுள்ள கேங்மேன் பணியாளர்களை பணி விடுவிப்பு செய்ய வலியுறுத்தியும், இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ள கேன் மேன் பணியாளர்களுக்கு காலதாமதம் இன்றி காலமுறை ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தி திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அமைப்பின் மாநில செயலாளர் கே.காங்கேயன் தலைமையில் மண்டல செயலாளர் ஆர். சிவராஜ், வட்டச் செயலாளர் மு .பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.