districts

img

வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிடுக

சென்னை, செப். 24- வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தை கைவிட கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்த  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனம் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர் சங்கம் சார்பில் சென்னையில் 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதவரம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு  மாவட்டச் செயலாளர் வி.ஜெயகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்பு சாமி, துணை பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணன், துணைத் தலைவர் இ.எஸ்.பிரபாகரன், மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுரேந்தர், உழைக்கும் கரங்கள் ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெற்றிவேல், சாமி (தமிழ்நாடு கால்டாக்சி ஓட்டுநர் சங்கம்), குணசேகரன் (அனைத்திந்தியா ஓட்டுநர் சங்கம்) ஆகியோர் பேசினர். தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவல கம் முன்பு மாநிலக் குழு உறுப்பினர் பி.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் எஸ்.காதர் உசேன், சிஐடியு மாநில குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் ஆகியோர் பேசினர். அம்பத்தூர் ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு சிஐடியு தலைவர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சு.பால்சாமி, அ.ராயப்பன் (மோட்டார் வாக னம்), ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஜி.மூர்த்தி,  கே.சேட்டு, எம்.முருகன், டி.எம்.செல்வன், ஆர்,கோபி (சிஐடியு) ஆகியோர் பேசினர். தென்சென்னை தென்சென்னையில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்மயாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆட்டோ டாக்சி ஓட்டுநர்  சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  என்.ஜீவா தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஏ.நடராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் இ.உமாபதி மற்றும் சி.முருகன், கே.சுப்ரமணி உள்ளிட்டோர் பேசினர்.