districts

img

மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.வெங்கடய்யா தலைமையில் பாரத் நகர் மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவெற்றியூர் எண்ணூர் பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் கே.கே.புஷ்பா, கட்டுமான சங்க செயலாளர் அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;