முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரியில் நலவாரிய அலுவலகம் முன்பு (ஜன.3) செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வி.ஆர்.லட்சுமணன், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.