அரசாணை 115&152 திரும்ப பெறக்கோரி வெள்ளியன்று (டிச.2) புரசைவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, பிரியதர்ஷினி எம்.சி., மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.